இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு எதை கொண்டு வந்தது?
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு எதை கொண்டு வந்தது?

1,சமாதானத்தை கொண்டு வந்தது

சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, 

கொலோசெயர் 1:20

2,நம்மைச் சுத்திகரிக்கும். 

 இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 

1 யோவான் 1:7

3,பாவமன்னிப்பாகிய மீட்பு

 இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 

எபேசியர் 1:7

 எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 

வெளி 5:9

4,நீதிமான்களாக்கப்பட்டிருக்க

 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, 

ரோமர் 5:9

5,ஐக்கியமாயிருக்கிறதல்லவா

நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? 

1 கொரிந்தியர் 10:16

6, நித்தியஜீவனை அடையும்படிக்கு,

 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 

யோவான் 3:15

7,மரண பயத்திலிருந்து விடுதலை 

 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். 

எபிரேயர் 2:15

8,உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று

மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. 

1 கொரிந்தியர் 15:21

9,கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 

எபேசியர் 2:13

10,இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

 ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 

வெளி 12:11

11,நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

 அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். 

கலாத்தியர் 6:14

12,சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். 

 கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். 

கலாத்தியர் 3:13

13,இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக.


 இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். 

எபிரேயர் 13:12

14,என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 

யோவான் 6:55

15,பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு,

 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 

ரோமர் 6:6

16,தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 

 நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 

எபிரேயர் 12:24

17,தேவனுக்கு ஒப்புரவாக்கினார்

 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

எபேசியர் 2:16