1,சமாதானத்தை கொண்டு வந்தது
சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி,
கொலோசெயர் 1:20
2,நம்மைச் சுத்திகரிக்கும்.
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
1 யோவான் 1:7
3,பாவமன்னிப்பாகிய மீட்பு
இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7
எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
வெளி 5:9
4,நீதிமான்களாக்கப்பட்டிருக்க
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க,
ரோமர் 5:9
5,ஐக்கியமாயிருக்கிறதல்லவா
நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
1 கொரிந்தியர் 10:16
6, நித்தியஜீவனை அடையும்படிக்கு,
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
யோவான் 3:15
7,மரண பயத்திலிருந்து விடுதலை
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
எபிரேயர் 2:15
8,உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
1 கொரிந்தியர் 15:21
9,கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
எபேசியர் 2:13
10,இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
வெளி 12:11
11,நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
கலாத்தியர் 6:14
12,சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3:13
13,இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக.
இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
எபிரேயர் 13:12
14,என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
யோவான் 6:55
15,பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு,
நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 6:6
16,தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
எபிரேயர் 12:24
17,தேவனுக்கு ஒப்புரவாக்கினார்
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
எபேசியர் 2:16